செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2018-10-09 04:55 GMT   |   Update On 2018-10-09 04:55 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 6ஆயிரத்து 961 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 7ஆயிரத்து 28 கனஅடியாக அதிகரித்தது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 6ஆயிரத்து 961 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 7ஆயிரத்து 28 கனஅடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து நேற்று 1,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் திறப்பு 1,300 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று 102.67 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.01 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
Tags:    

Similar News