செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது

Published On 2018-10-01 05:19 GMT   |   Update On 2018-10-01 05:19 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 14 ஆயிரத்து 143 கனஅடியாக குறைந்தது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று அணைக்கு 16 ஆயிரத்து 545 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 14 ஆயிரத்து 143 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 104.27 அடியில் இருந்து 104.21 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த 13-ந் தேதி முதல் 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 28-ந் தேதி தண்ணீர் திறப்பு 24 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இது 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று முதல் மீண்டும் தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. #MetturDam
Tags:    

Similar News