செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - கட்டிடம் இடிந்து தரைமட்டம்

Published On 2018-09-02 04:40 GMT   |   Update On 2018-09-02 04:40 GMT
சிவகாசி பட்டாசு ஆலையில் நள்ளிரவில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையின் அறை இடிந்து தரைமட்டமானது.#crackerfactoryexplosion

சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள தனஞ்சான்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சிவகாசியைச் சேர்ந்த தங்கராஜ் இந்த ஆலையை நடத்தி வருகிறார்.

இங்கு சுற்று வட்டார கிராம மக்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை வேலை முடிந்ததும் பட்டாசுகளை அறையில் வைத்து விட்டு தொழிலாளர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் பட்டாசு வைத்திருந்த ஒரு அறையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் அந்த அறை இடிந்து தரை மட்டமானது. வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தீயை அணைந்தனர்.

நள்ளிரவில் வெடி விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News