செய்திகள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புழல் ஜெயிலில் இருந்து மேலும் 10 கைதிகள் விடுதலை

Published On 2018-07-25 09:23 GMT   |   Update On 2018-07-25 09:23 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 10 கைதிகள் 9வது கட்டமாக புழல் ஜெயிலில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRcenturyceremony
செங்குன்றம்:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று புழல் ஜெயிலில் இருந்து 9-வது கட்டமாக மேலும் 10 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை ஜெயில் வாசலில் காத்திருந்த உறவினர்கள் கண்ணீருடன் அழைத்து சென்றனர்.

விடுதலையான கைதிகளுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் மற்றும் அதிகாரிகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். #MGRcenturyceremony

Tags:    

Similar News