செய்திகள்
நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் மழை - பாபநாசம் அணை நீர்மட்டம் 102 அடியாக உயர்வு
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் 102 அடியாக உயர்ந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் 60 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 52 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் அணை பகுதியில் 43 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5488 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 1332 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. நேற்று 97.20 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 102 அடியானது.
இதுபோல சேர்வலாறு அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 111.61 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று 121.59 அடியானது. ஆனால் மணிமுத்தாறுக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 79.60 அடியாக உள்ளது.
கடனா நதியின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 83.50 அடியாக உள்ளது. ராமநதியின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 80.75 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை முழு கொள்ளளவை அடைந்து 71.20 அடியுடன் நிரம்பி வழிகிறது. குண்டாறு அணை நீர்மட்டம் கடந்த 1 மாதமாகவே நிரம்பி வழிகிறது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 46 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 122.75 அடியாகவும் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆய்க்குடி- 3.5
சேரை- 1.6
நாங்குநேரி- 0.5
நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் 60 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 52 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் அணை பகுதியில் 43 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5488 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 1332 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. நேற்று 97.20 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 102 அடியானது.
இதுபோல சேர்வலாறு அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 111.61 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று 121.59 அடியானது. ஆனால் மணிமுத்தாறுக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 79.60 அடியாக உள்ளது.
கடனா நதியின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 83.50 அடியாக உள்ளது. ராமநதியின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 80.75 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை முழு கொள்ளளவை அடைந்து 71.20 அடியுடன் நிரம்பி வழிகிறது. குண்டாறு அணை நீர்மட்டம் கடந்த 1 மாதமாகவே நிரம்பி வழிகிறது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 46 அடியாகவும், அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 122.75 அடியாகவும் உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆய்க்குடி- 3.5
சேரை- 1.6
நாங்குநேரி- 0.5