செய்திகள்

மழை எதிரொலி - சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

Published On 2018-05-16 08:41 GMT   |   Update On 2018-05-16 08:41 GMT
சதுரகிரி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பக்தர்கள் இன்று மலைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

நேற்று அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் சதுரகிரி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, கருப்பசாமி பாறை பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து பக்தர்கள் இன்று மலைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் மலைக்கு மேல் கோவிலில் உள்ள 500 பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மழை நின்று இயல்பு நிலைக்கு வந்த பின் பக்தர்கள் அடிவாரத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News