செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவு- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2018-05-16 06:02 GMT   |   Update On 2018-05-16 06:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 83.60 சதவீதம் பேரும், மாணவிகள் 90.56 சதவீதம் பேரும் என மொத்தம் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusTwoExamResults #Plus2Result
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் 176 பள்ளிகளில் இருந்து 22 ஆயிரத்து 467 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தகுதி பெற்று 10 ஆயிரத்து 899 மாணவர்களும்,11 ஆயிரத்து 311 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 210 பேர் ஓசூர் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களிலும், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும் என மொத்தம் 66 மையங்களில் தேர்வு எழுதினர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தேர்வு முடிவுகளில் 9ஆயிரத்து 112 மாணவர்களும், 10 ஆயிரத்து 240 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 352 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 83.60 சதவீதம் பேரும், மாணவிகள் 90.56 சதவீதம் பேரும் என மொத்தம் 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 88.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதால் இது கடந்த ஆண்டைவிட 0.89 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி அடைந்துள்ளனர். #PlusTwoExamResults #PlusTwoResults #Plus2Result
Tags:    

Similar News