செய்திகள்
ஆசிரியர் சிவனேசன்

6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில்

Published On 2018-04-26 10:23 GMT   |   Update On 2018-04-26 10:23 GMT
காரைக்காலில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால்:

புதுவை மாநிலம் நெட்டப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 42). காரைக்காலை அடுத்த சுரக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் ஓய்வறையில் தனியாக இருந்தார். அப்போது அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தேர்வு தொடர்பாக பேசவேண்டும் என்று அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதை பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். ஆசிரியரின் மிரட்டலுக்கு பயந்துபோன மாணவி, தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறவில்லை.

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை, சிகிச்சைக்காக அவளது பெற்றோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். மாணவியை டாக்டர் பரிசோதித்தார்.

அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி அவளது பெற்றோரிடம் கூறினார். இதுபற்றி திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் ஆசிரியர் சிவனேசனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவனேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சிவகடாச்சம் உத்தரவிட்டார்.  #KaraikalTeacher #GirlStudentAbuse #TamilNews
Tags:    

Similar News