செய்திகள்
எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
தி.மு.க. தலைவர் கலைஞரையும், கனிமொழியையும் தரம் தாழ்த்தி பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை இந்திரா காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல் அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
புதுவையில் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதித்துறைக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுத உள்ளேன்.
எச்.ராஜா தரமில்லாத அரசியல்வாதி. தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார்.
தி.மு.க. தலைவர் கலைஞரையும், கனிமொழியையும் தரம் தாழ்த்தி பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எச்.ராஜா எதை பேசி திசை திருப்பினாலும் தமிழகத்தின் பிரச்சினைகள் நீர்த்து போகாது.
இவ்வாறு முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார். #tamilnews
புதுவை இந்திரா காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல் அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டில் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
புதுவையில் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதித்துறைக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுத உள்ளேன்.
எச்.ராஜா தரமில்லாத அரசியல்வாதி. தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார்.
தி.மு.க. தலைவர் கலைஞரையும், கனிமொழியையும் தரம் தாழ்த்தி பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எச்.ராஜா எதை பேசி திசை திருப்பினாலும் தமிழகத்தின் பிரச்சினைகள் நீர்த்து போகாது.
இவ்வாறு முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார். #tamilnews