செய்திகள்
வீரப்பன் அண்ணன் மாதையன் கோவை ஆஸ்பத்திரியில் அனுமதி
மூச்சு திணறலால் அவதிப்பட்ட வீரப்பன் அண்ணன் மாதையன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கோவை:
சந்தன கட்டை கடத்தல் மன்னன் வீரப்பனின் சொந்த அண்ணன் மாதையன் (84). இவர் சத்தியமங்கலம் வன பகுதியில் வன அதிகாரி ஒருவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 வருடத்துக்கும் மேலாக அவர் சிறையில் உள்ளார்.வயது முதிர்வு காரணமாக அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அவர் கோவை சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மாதையனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை சிறைத்துறை அதிகாரிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
சந்தன கட்டை கடத்தல் மன்னன் வீரப்பனின் சொந்த அண்ணன் மாதையன் (84). இவர் சத்தியமங்கலம் வன பகுதியில் வன அதிகாரி ஒருவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 வருடத்துக்கும் மேலாக அவர் சிறையில் உள்ளார்.வயது முதிர்வு காரணமாக அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அவர் கோவை சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மாதையனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை சிறைத்துறை அதிகாரிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews