செய்திகள்
ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது
தஞ்சை மாநகராட்சி ஆணையர் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை:
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு இன்று மதியம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சென்று சோதனை நடத்தினர். பின்னர், மாநகராட்சி ஆணையர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
கீழவஸ்தாசாவடியைச் சேர்ந்த சம்பந்தம் என்பவரிடம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லஞ்சம் வாங்குவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட நாகராஜ் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையால், மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews