செய்திகள்
விக்கிரவாண்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொன்ற வாலிபர் சிக்கினார்
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொன்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி லட்சுமிபுரம் ஜம்ஜம்நகரை சேர்ந்தவர் இக்பால். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மம்முதாபீவி (வயது 41). இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது. இந்த 3 குழந்தைகளும் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது விக்கிரவாண்டியில் உள்ள வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இக்பால் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி மம்முதாபீவி வீட்டில் இல்லை. அவரை பல இடங்களில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இக்பால் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் மம்முதாபீவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ஓடையில் பெண் ஒருவர் நிர்வாணநிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த பெண் யார் என்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் காணாமல் போன மம்முதாபீவி என்பது தெரியவந்தது.
மேலும் அவரது கணவர் இக்பாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு வந்து கொலை செய்யப்பட்டது தன் மனைவிதான் என்று போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.
மர்ம வாலிபர் ஒருவர் மம்முதாபீவியை அழைத்துவந்து உல்லாசம் அனுபவித்துவிட்டு கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த வாலிபர் யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது விழுப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அடிக்கடி மம்முதாபீவி சந்தித்து சென்றது தெரிந்தது. எனவே அந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு விழுப்புரத்தில் அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விக்கிரவாண்டியில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்ட அந்த வாலிபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் மம்முதாபீவியை கொலை செய்தது தெரிய வந்ததுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி லட்சுமிபுரம் ஜம்ஜம்நகரை சேர்ந்தவர் இக்பால். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மம்முதாபீவி (வயது 41). இவர்களுக்கு 2 ஆண்குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது. இந்த 3 குழந்தைகளும் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது விக்கிரவாண்டியில் உள்ள வீட்டில் கணவன்-மனைவி மட்டும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இக்பால் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி மம்முதாபீவி வீட்டில் இல்லை. அவரை பல இடங்களில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இக்பால் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் மம்முதாபீவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ஓடையில் பெண் ஒருவர் நிர்வாணநிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த பெண் யார் என்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் காணாமல் போன மம்முதாபீவி என்பது தெரியவந்தது.
மேலும் அவரது கணவர் இக்பாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு வந்து கொலை செய்யப்பட்டது தன் மனைவிதான் என்று போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.
மர்ம வாலிபர் ஒருவர் மம்முதாபீவியை அழைத்துவந்து உல்லாசம் அனுபவித்துவிட்டு கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த வாலிபர் யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது விழுப்புரத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அடிக்கடி மம்முதாபீவி சந்தித்து சென்றது தெரிந்தது. எனவே அந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு விழுப்புரத்தில் அந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விக்கிரவாண்டியில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்ட அந்த வாலிபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் மம்முதாபீவியை கொலை செய்தது தெரிய வந்ததுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.