செய்திகள்

தரமில்லாத உணவு விற்பனை: விழுப்புரம் ரெயில் நிலைய உணவகத்துக்கு ‘சீல்’வைப்பு

Published On 2017-11-22 06:53 GMT   |   Update On 2017-11-22 06:53 GMT
விழுப்புரம் ரெயில் நிலைய உணவகத்தில் தரமில்லாத உணவு வகைகள் தயார் செய்து விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் உணவகத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது நடைமேடையில் சைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த உணவகத்தில் தயார் செய்து விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் தரமில்லை என்று திருச்சி கோட்ட ரெயில்வே வணிகப்பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில் கோட்ட வணிகப்பிரிவு அதிகாரிகள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்து உணவகத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்ட உணவு வகைகள் தரமில்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவகத்தை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த உணவகத்தில் தரமில்லாத உணவு வகைகள் தயார் செய்து விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே இந்த உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இதுபோன்று பல்வேறு புகார்கள் வந்ததால் உணவகம் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News