செய்திகள்
கவர்னரின் இருக்கையில் சிறுவனை அமர வைத்து அழகு பார்த்த கிரண்பேடி
கவர்னர் மாளிகையில் கவர்னரின் இருக்கையில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னராக கிரண்பேடி பதவியேற்ற நாள் முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் நேரடியாக கள ஆய்வு, தூய்மைப்பணி எனவும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடவும் திறந்து விட்டுள்ளார். அத்துடன் கவர்னர் மாளிகையை பார்வையிட வருபவர்களுடன் கிரண்பேடி புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். வார இறுதி நாட்களில் மாணவர்களுக்காக சொற்பொழிவுகள் நடத்தப்படுவதுடன் திரைப்படங்களும் கவர்னர் மாளிகையில் காட்டப்படுகிறது.
இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் கவர்னரின் இருக்கையில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது. அருகே கவர்னர் கிரண்பேடி நிற்கிறார். இந்த படத்தை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில், ‘கவர்னர் மாளிகையை பார்வையிட வரும் சிறுவர்கள் பலர் கவர்னரின் இருக்கையில் அமர வைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் எதிர்காலத்தில் கவர்னராக வந்தாலும் வரலாம். யார் அறிவார்?’ என்று அதில் அவர் வினா எழுப்பி உள்ளார்.
புதுவை கவர்னராக கிரண்பேடி பதவியேற்ற நாள் முதல் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் நேரடியாக கள ஆய்வு, தூய்மைப்பணி எனவும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடவும் திறந்து விட்டுள்ளார். அத்துடன் கவர்னர் மாளிகையை பார்வையிட வருபவர்களுடன் கிரண்பேடி புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். வார இறுதி நாட்களில் மாணவர்களுக்காக சொற்பொழிவுகள் நடத்தப்படுவதுடன் திரைப்படங்களும் கவர்னர் மாளிகையில் காட்டப்படுகிறது.
இந்தநிலையில் கவர்னர் மாளிகையில் கவர்னரின் இருக்கையில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருக்கும் படம் வெளியாகி உள்ளது. அருகே கவர்னர் கிரண்பேடி நிற்கிறார். இந்த படத்தை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில், ‘கவர்னர் மாளிகையை பார்வையிட வரும் சிறுவர்கள் பலர் கவர்னரின் இருக்கையில் அமர வைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் எதிர்காலத்தில் கவர்னராக வந்தாலும் வரலாம். யார் அறிவார்?’ என்று அதில் அவர் வினா எழுப்பி உள்ளார்.