செய்திகள்
பரமக்குடியில் தினகரன் ஆதரவாளரான முத்தையா எம்.எல்.ஏ.வை காணவில்லை என போஸ்டர்
பரமக்குடியில் தினகரன் ஆதரவாளரான முத்தையா எம்.எல்.ஏ.வை காணவில்லை என நகர் முழுவதும் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரமக்குடி:
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் உள்கட்சி குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், டி.டி.வி. தினகரன் தலைமையிலும் எம்.எல்.ஏ.க்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்தையா. இவர் டி.டி.வி. தினகரன் ஆதரவாக உள்ளார். புதுச்சேரியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவரது தொகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் பரபரப்பு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “காணவில்லை. முத்தையா எம்.எல்.ஏ.வை காணவில்லை. தொகுதி மக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இவண்: அம்மாவின் உண்மை விசுவாசிகள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் நகர் முழுவதும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் உள்கட்சி குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், டி.டி.வி. தினகரன் தலைமையிலும் எம்.எல்.ஏ.க்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்தையா. இவர் டி.டி.வி. தினகரன் ஆதரவாக உள்ளார். புதுச்சேரியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சொகுசு விடுதியில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவரது தொகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் பரபரப்பு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “காணவில்லை. முத்தையா எம்.எல்.ஏ.வை காணவில்லை. தொகுதி மக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இவண்: அம்மாவின் உண்மை விசுவாசிகள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் நகர் முழுவதும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.