செய்திகள்
புதுவை கடற்கரை சாலை கார்கில் நினைவிடத்தில் கவர்னர் கிரண்பேடி அஞ்சலி
புதுவை கடற்கரை சாலை பிரெஞ்சு தூதரகம் எதிரில் உள்ள கார்கில் நினைவு சின்னத்தில் இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. கவர்னர் கிரண்பேடி மலர்வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கார்கில் வெற்றி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுவை கடற்கரை சாலை பிரெஞ்சு தூதரகம் எதிரில் உள்ள கார்கில் நினைவு சின்னத்தில் இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. கவர்னர் கிரண்பேடி மலர்வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலகண்ணன், துணைசபாநாயகர் சிவகொழுந்து, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, அரசுசெயலர் கந்தவேலு, டி.ஐ.ஜி. சுனில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் மலர்வளையம் வைத்து போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவவீரர்கள், முப்படை நலத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கார்கில் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர்.
புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கார்கில் வெற்றி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுவை கடற்கரை சாலை பிரெஞ்சு தூதரகம் எதிரில் உள்ள கார்கில் நினைவு சின்னத்தில் இன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. கவர்னர் கிரண்பேடி மலர்வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலகண்ணன், துணைசபாநாயகர் சிவகொழுந்து, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, அரசுசெயலர் கந்தவேலு, டி.ஐ.ஜி. சுனில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் மலர்வளையம் வைத்து போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவவீரர்கள், முப்படை நலத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கார்கில் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினர்.