செய்திகள்

செல்லூரில் கடன் தகராறில் கார் கடத்தல்: போலீசில் புகார்

Published On 2017-07-24 12:56 GMT   |   Update On 2017-07-24 12:56 GMT
கடன் தகராறில் கார் கடத்தப்பட்டதாக தனியார் நிறுவன அதிகாரி போலீசில் புகார் கொடுத்தார்.

மதுரை:

வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பாலகுருநாதன் (வயது 55). தனியார் நிறுவன அதிகாரி. இவர் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கு வட்டியாக மாதம் ரூ.7 ஆயிரத்து 500 கட்டியுள்ளார். 10 மாதமாக ரூ.75 ஆயிரம் கட்டிய நிலையில், மேலும் ரூ.65 ஆயிரம் கட்ட வேண்டும் என சுப்பிரமணியன் கூறினாராம்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் தனது காரை சுப்பிரமணியன் கடத்தி சென்று விட்டதாக செல்லூர் போலீசில் பாலகுருநாதன் புகார் செய்தார். போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News