செய்திகள்
உசிம்பட்டியில் இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கருப்புகொடி
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டினர். இதனை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்த்ததால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
உசிலம்பட்டி:
முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சென்றார்.
அங்குள்ள தேவர் சிலை அருகே அவரது கார் சென்ற போது அங்கு வந்த தினகரன் ஆதரவாளர்கள் வக்கீல் காக்கிராஜா தலைமையில் கருப்புகொடி காட்டி கோஷம் எழுப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது.
உசிலம்பட்டி நகர் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வக்கீல் காக்கிராஜா கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் காரணமாக உசிலம்பட்டியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சென்றார்.
அங்குள்ள தேவர் சிலை அருகே அவரது கார் சென்ற போது அங்கு வந்த தினகரன் ஆதரவாளர்கள் வக்கீல் காக்கிராஜா தலைமையில் கருப்புகொடி காட்டி கோஷம் எழுப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது.
உசிலம்பட்டி நகர் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வக்கீல் காக்கிராஜா கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் காரணமாக உசிலம்பட்டியில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.