செய்திகள்

தீபா பேரவை மாவட்ட செயலாளர்கள் 22-ந்தேதி அறிவிப்பு

Published On 2017-05-19 07:47 GMT   |   Update On 2017-05-19 07:47 GMT
எம்ஜிஆர்-அம்மா தீபா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வருகிற 22-ந்தேதி அன்று முறையாக அறிவிக்கப்படும் என தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

எம்ஜிஆர்-அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா (அ.தி.மு.க. ஜெ.தீபா அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானத் தொண்டர்களும், முன்னணி நிர்வாகிகளும் புரட்சித்தலைவி அம்மா மறைவுக்குப் பின் என்னை தலைமை ஏற்க கோரி அன்பான அழைப்பு விடுத்தனர்.

அம்மாவின் கனவு நனவாக தொடர்ந்து அயராது இயக்கப் பணியாற்றி வருகிறீர்கள். இயக்கத்தை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நெறிப்படுத்த முதல் கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் நேர்காணல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தற்போது நானும் உயர் மட்டக்குழு உறுப்பினர்களும் மாவட்டச் செயலாளர் பரிசீலனையில் ஈடுப்பட்டுள்ளோம். மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வருகிற 22-ந்தேதி அன்று முறையாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News