செய்திகள்

என்.ஆர். காங். பிரமுகர் கொலையில் தொழில் அதிபர் உதயகுமார் உள்பட 5 பேர் கைது

Published On 2017-04-26 10:31 GMT   |   Update On 2017-04-26 10:31 GMT
என்.ஆர். காங். பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய தொழில் அதிபர் உதயகுமார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை திருபுவனை என்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், தொழில் அதிபருமான வேலழகன் கடந்த 19-ந் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருபுவனை போலீசார் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து கொலை வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி துப்பு துலக்கினார்கள்.

திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் உதயகுமார் இந்த கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அவரையும், அவருடன் சேர்ந்த மேலும் சிலரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அவர்கள் நாங்கள்தான் வேலழகனை கொலை செய்தோம் என்று கூறினார்கள். இதையடுத்து 5 பேரை போலீசார கைது செய்துள்ளனர்.

1. உதயகுமார்,

2. செங்கதிரவன்,

3. சிவராமன்,

4. கார்த்தி,

5. ரமேஷ்,

சன்னியாசிகுப்பம்.

இவர்களில் உதயகுமார் திருபுவனையில் உள்ள பன்னாட்டு நிறுவன தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர் காண்டிராக்டராக இருந்து வந்தார். இத்துடன் பல்வேறு தொழில்களையும் நடத்தி வந்தார்.

அவருக்கு வேலழகன் தொழில் போட்டியாளராக இருந்ததால் அவரை கொலை செய்ததாக போலீசில் கூறி உள்ளனர்.

Similar News