செய்திகள்

பனைக்குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் கைது

Published On 2017-04-24 10:18 GMT   |   Update On 2017-04-24 10:18 GMT
பனைக்குளம் அருகே 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தை அடுத்த சோகையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் (வயது32) அங்கு வந்தார்.

அவர் மாணவியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து தனது தாயிடம் மாணவி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி வழக்குப்பதிவு செய்து முருகராஜை கைது செய்தார்.

Similar News