செய்திகள்

திருமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்: கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் மீது புகார்

Published On 2017-04-24 10:11 GMT   |   Update On 2017-04-24 10:12 GMT
பிளஸ்-2 மாணவியை கடத்தியதாக கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எம்.கல்லுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட டி.பாறை பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயபாண்டி என்பவருக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு மாணவி திடீரென மாயமாகி விட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை எம்.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை ஜெயபாண்டி, அவரது தாய் பாஞ்சாயி, சகோதரி பாண்டீஸ்வரி, நண்பர்கள் சின்னதம்பி, செல்வேந்திரன், ராஜபாண்டி ஆகியோர் கடத்தி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News