செய்திகள்

சிவகாசியில் பெண்ணிடம் டெலிபோனில் ஆபாச பேச்சு: வாலிபர் கைது

Published On 2017-04-23 11:44 GMT   |   Update On 2017-04-23 11:44 GMT
சிவகாசியில் டெலிபோனில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி:

சிவகங்கை தாலுகா நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் பாண்டி, விறகு வியாபாரி. இவரது மனைவி வனிதா (வயது 27) இவர்களிடம் விறகு விற்க வருபவர் பாக்கியராஜ் (29), இடையமேலூரைச் சேர்ந்த இவர், விறகுகளை வெட்டி விற்று வந்தார்.

விறகுகளை விற்க வரும்போது வனிதாவுடன் பேசுவார். அவரும் இடைய மேலூரைச் சேர்ந்தவர் என்பதால் பாக்கியராஜுடன் சகஜமாக பேசியுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட பாக்கியராஜ், செல்போனில் ஆபாசமாக பேசியுள்ளார். இதனை வனிதா தனது கணவர் பாண்டியிடம் தெரிவித்துள்ளார்.

அவர் பாக்கியராஜை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தனது செயலை நிறுத்தாததால் சிவகங்கை தாலுகா போலீசில் வனிதா புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாக்கியராஜை கைது செய்தார்.

Similar News