செய்திகள்

கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2017-04-23 11:15 GMT   |   Update On 2017-04-23 11:15 GMT
பாபநாசம் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே திருக்கருகாவூர் தெற்கு ஆதிதிராவிட தெருவில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன் (வயது 47).விவசாயி. இவர் மனைவி பாமா (30), 3 மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் வெளியில் அதிகம் கடன் வாங்கியிருந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று மனமுடைந்து வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமச்சந்திரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி பாமா கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News