செய்திகள்
காஞ்சீபுரம்- திருவள்ளூரில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம்: நோயாளிகள் அவதி
காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
திருவள்ளூர்:
அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு படிக்க வழங்கிய 50 சதவீத இட ஒதுக்கீடை ரத்து செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் ராஜ்குமார், பொருளாளர் டாக்டர் சந்திரன் மற்றும் டாக்டர்கள் ஜெகதீசன், சதிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் மட்டுமே டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். உள் நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற முடியாமல் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தவித்தனர்.
சிகிச்சை முடிந்ததும், ‘டிஸ்சார்ஜ்’ செய்ய டாக்டர்கள் இல்லாததால், தாய்சேய் நலபிரிவில் பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்தனர்.
இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் 14 அரசு மருத்துவமனை 72 ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்க்கும் 450 டாக்டர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் டாக்டர் அனுரத்தினம் தலைமையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பாஸ்கர் தலைமையில் டாக்டர்கள் இன்று காலை பணியை புறக்கணித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் டாக்டர்கள் சதீஷ் குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இதனால் நோயளிகள் அவதி அடைந்தனர்.
அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு படிக்க வழங்கிய 50 சதவீத இட ஒதுக்கீடை ரத்து செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர் அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் ராஜ்குமார், பொருளாளர் டாக்டர் சந்திரன் மற்றும் டாக்டர்கள் ஜெகதீசன், சதிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் மட்டுமே டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். உள் நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற முடியாமல் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தவித்தனர்.
சிகிச்சை முடிந்ததும், ‘டிஸ்சார்ஜ்’ செய்ய டாக்டர்கள் இல்லாததால், தாய்சேய் நலபிரிவில் பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் காத்திருந்தனர்.
இதை போல் திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் 14 அரசு மருத்துவமனை 72 ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்க்கும் 450 டாக்டர்கள் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் டாக்டர் அனுரத்தினம் தலைமையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பாஸ்கர் தலைமையில் டாக்டர்கள் இன்று காலை பணியை புறக்கணித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் டாக்டர்கள் சதீஷ் குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இதனால் நோயளிகள் அவதி அடைந்தனர்.