செய்திகள்

கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் செல்போனுக்கு வந்த ஆபாச படங்கள்: 3 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2017-03-20 13:28 GMT   |   Update On 2017-03-20 16:11 GMT
தென்தாமரைகுளம் அருகே கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யதனர்.
நாகர்கோவில்:

தென்தாமரைகுளத்தை அடுத்த அய்யா நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டி புனிதா (வயது26). இவர் குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு ரியல்எஸ்டேட் நிறுவனத்திலும் கிறிஸ்டிபுனிதா வேலை பார்த்து வருகிறார்.

அந்த நிறுவனத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அகஸ்டின்(50) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். ஒரே இடத்தில் வேலை செய்த முறையில் அகஸ்டின், கிறிஸ்டிபுனிதாவிடம் சகஜமாக பழகி வந்தார். அப்போது அவரை தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிறிஸ்டிபுனிதா அவரை கண்டித்தார். மேலும் இது பற்றி தென்தாமரை குளம் போலீசிலும் புகார் செய்தார்.

இந்த நிலையில் கிறிஸ்டி புனிதா செல்போனுக்கு அகஸ்டின் அடிக்கடி பேசி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால்  அவரை கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்து போன கிறிஸ்டிபுனிதா தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். மேலும் தனது தாயாரின் செல்போனை தனது உபயோகத்திற்கு பயன் படுத்தினார்.

இந்தநிலையில் அந்த செல்போனுக்கு ஆபாச புகைப்படங்களும், ஆபாச தகவல்களும் வர தொடங்கின. இதை அகஸ்டின் தான் அனுப்பினார் என்பதை அறிந்த கிறிஸ்டிபுனிதா இது பற்றி தனது தாயாரிடம் கூறி அழுதார்.

இந்த நிலையில் கிறிஸ்டி புனிதா சாமிதோப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த போது அகஸ்டின் மற்றும் நெல்லையைச் சேர்ந்த அவரது நண்பர் சார்லி மற்றும் ஒருவர் சேர்ந்து கிறிஸ்டிபுனிதாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் அகஸ்டினை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தினார்கள். இது பற்றி தென்தாமரைகுளம் போலீசில் கிறிஸ்டிபுனிதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் இது பற்றிய புகாரின் பேரில் அகஸ்டின், சார்லி மற்றும் அவரது நண்பர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News