செய்திகள்

அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை: கார்த்தி ப.சிதம்பரம் பேட்டி

Published On 2017-03-20 07:57 GMT   |   Update On 2017-03-20 07:57 GMT
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தாலும் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என மதுரையில் கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.
அவனியாபுரம்:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு பரப்பி பா.ஜனதா பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு மாநில அரசும் உடந்தையாக உள்ளது.

தமிழக அரசு மீனவர் பிரச்சனை குறித்து கடிதம் மூலமே மோடிக்கு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? அரசு இருக்கிறதா? என்று தெரியவில்லை. 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தாலும், அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை.

ஆர்.கே.நகரில் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பணம், பொருட்களை வாங்கக்கூடாது. திருமங்கலம் பார்முலாவுக்கு ஆர்.கே.நகர் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட நிர்வாகிகள் டால்பின் சுரேஷ், அறிவானந்தம், தங்கராமன், பாட்டம் சுரேஷ், ராஜரத்தினம், கோட்டையூர் லெமல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News