செய்திகள்
ராமேசுவரம் மீனவர்கள் குழு நாளை மத்திய மந்திரியுடன் சந்திப்பு
டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கைகள் குறித்து மீனவர்கள் குழுவினர் நாளை மனுகொடுத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
ராமேசுவரம்:
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், கோரிக்கை மனு கொடுக்கவும் ராமேசுவரம் மீனவர்கள் குழு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்திக்க உள்ளது. இதற்காக பா.ஜனதா மாநில துணைத்தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் மீனவர் சங்க பொறுப்பாளர்கள் தேவதாஸ், சேசுராஜா, யு.அருளானந்தம், ஜெஸ்டின் ஆகியோர் அடங்கிய மீனவர்கள் குழு இன்று காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.
நாளை(21-ந்தேதி) காலை 11 மணிக்கு டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கைகள் குறித்து மீனவர்கள் குழுவினர் மனுகொடுத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், கோரிக்கை மனு கொடுக்கவும் ராமேசுவரம் மீனவர்கள் குழு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்திக்க உள்ளது. இதற்காக பா.ஜனதா மாநில துணைத்தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் மீனவர் சங்க பொறுப்பாளர்கள் தேவதாஸ், சேசுராஜா, யு.அருளானந்தம், ஜெஸ்டின் ஆகியோர் அடங்கிய மீனவர்கள் குழு இன்று காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.
நாளை(21-ந்தேதி) காலை 11 மணிக்கு டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கைகள் குறித்து மீனவர்கள் குழுவினர் மனுகொடுத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.