செய்திகள்
மீனவர் சுட்டுக்கொலை: 6 மாவட்ட மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து அடுத்த கட்ட முடிவு எடுக்க இந்தியா - இலங்கை கடற்கரை சம்பந்தப்பட்ட 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
புதுச்சேரி:
தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.
இதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும், அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் முடிவு எடுக்க உள்ளோம். இதற்காக இந்தியா - இலங்கை கடற்கரை சம்பந்தப்பட்ட 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இதில், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருந்த ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.
இதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும், அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் முடிவு எடுக்க உள்ளோம். இதற்காக இந்தியா - இலங்கை கடற்கரை சம்பந்தப்பட்ட 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இதில், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.