செய்திகள்

புழல் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு எழுதிய கைதிக்கு திடீர் மாரடைப்பு

Published On 2017-03-02 09:17 GMT   |   Update On 2017-03-02 09:17 GMT
புழல் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு எழுதிய கைதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்குன்றம்:

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது.

புழல் ஜெயிலில் 98 கைதிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். தமிழகம் முழுவதும் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் புழல் ஜெயிலில் வந்து தேர்வு எழுதினார்கள்.

மதுரை மத்திய ஜெயிலில் இருந்து 11 கைதிகள் புழல் ஜெயிலுக்கு தேர்வு எழுத வந்திருந்தனர்.

மதுரை அருகே உள்ள கடலாடி என்ற பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி (வயது44) என்ற கைதி இன்று புழல் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். மதியம் 12 மணி அளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News