செய்திகள்
சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயர் உள்பட 3 பேர் அடுத்த மாதம் ஆஜராக நீதிபதி உத்தரவு
கோவை வடவள்ளி பகுதியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக சரிதா நாயர், உள்பட 3 பேர் அடுத்த மாதம் ஆஜராக நீதிபதி உத்தரவிடுள்ளார்.
கோவை வடவள்ளி பகுதியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை ஜூடிசியல் மாதிஸ்ட்ரேட் 6-ல் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக சரிதா நாயர், பிஜூராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் இன்று ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால் 3 பேரும் இன்று வரவில்லை.
எனவே வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேலு மார்ச் 14-ந் தேதி மீண்டும் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.