செய்திகள்

படகு விபத்தில் பலியானவர்களுக்கு ஜி.கே.வாசன் இரங்கல்

Published On 2017-02-27 06:43 GMT   |   Update On 2017-02-27 06:43 GMT
மணப்பாடு பகுதி கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் அருகே மணப்பாடு பகுதி கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலர் பலியானது துரதிஷ்ட வசமானது. மிகவும் வேதனைக்குரியது. திருச்சி மற்றும் திருச்செந்தூர் படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலாச் சென்றனர்.

விபத்துக்குள்ளான படகில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம். தங்களது சொந்த லாபத்திற்காக பராமரிப்பு இல்லாமல், அரசின் உரிமம் பெறாமல் படகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News