செய்திகள்

செல்போனில் படம்பிடித்து சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம்: தொழிலாளி கைது

Published On 2017-02-22 16:18 GMT   |   Update On 2017-02-22 16:18 GMT
கருங்கல் அருகே செல்போனில் படம்பிடித்து சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பள்ளியாடி:

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியை  சேர்ந்தவர் செல்வகுமார் என்ற கனி (வயது 34). மீன்பிடி தொழிலாளி. அந்த பகுதியில் வசிக்கும் ஒருவரின் 9 வயது பேத்தியிடம் செல்வகுமார் அடிக்கடி பாசமாக பழகுவது வழக்கம். இதனால் அவர்களது வீட்டிற்கு அடிக்கடி செல்வகுமார் சென்று வருவார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அந்த சிறுமி மட்டும் தனிமையில் இருந்தார். இதை நோட்ட மிட்ட செல்வகுமார் அங்கு சென்று அந்த சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து உள்ளார். மேலும் அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்தார். அதன்பிறகு அந்த சிறுமியை மிரட்டிவிட்டு சென்று விட்டார்.

நடந்த சம்பவங்களை தனது தாத்தாவிடம் கூறி அந்த சிறுமி அழுதாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News