செய்திகள்
போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும்: ஜி.கே.வாசன்
போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பல கட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன் கருதி தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் அரசின் சார்பிலும், அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பிலும், தொழிலாளர்கள் சார்பிலும் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு உடனடியாக ஏற்பாடு செய்து நல்ல தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.