செய்திகள்

பாளை அருகே பிளஸ்-1 மாணவியிடம் தவறாக பழகிய கிறிஸ்தவ கோவில் ஊழியர் கைது

Published On 2017-02-20 13:09 GMT   |   Update On 2017-02-20 13:09 GMT
பாளை அருகே இளம்பெண்ணிடம் தவறாக பழகிய கிறிஸ்தவ கோவில் ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த தமிழாகுறிச்சியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது36). இவர் பூக்குழியில் உள்ள கிறிஸ்தவ கோவிலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது கோவிலுக்கு வந்த பிளஸ்-1 மாணவி ஒருவரிடம் சத்தியராஜ் அடிக்கடி பேசி, காரில் பாளையில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். இது குறித்து அந்த மாணவியின் உறவினர்கள் பலமுறை கண்டித்தும், சத்தியராஜ் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவியின் தாயார் அம்பை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

பெண் போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண்ணிடம் தவறாக பழகியதாக வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தனர்.

Similar News