செய்திகள்

டெல்லி மேல்சபை அ.தி.மு.க. எம்.பி. லட்சுமணன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

Published On 2017-02-18 06:22 GMT   |   Update On 2017-02-18 06:22 GMT
விழுப்புரத்தைச் சேர்ந்த டெல்லி மேல்சபை அ.தி.மு.க. எம்.பி. லட்சுமணன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு பெருகி வருகிறது.

விழுப்புரத்தைச் சேர்ந்த டெல்லி மேல்சபை அ.தி.மு.க. எம்.பி. லட்சுமணனும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அவர் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். அங்கு ஓ.பன்னீர்செல் வத்தை சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவை தெரிவிக்கிறார்.

லட்சுமணன் எம்.பி. விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News