செய்திகள்

சென்னை-தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரெயில்: முன்பதிவு இன்று தொடக்கம்

Published On 2017-02-15 03:10 GMT   |   Update On 2017-02-15 03:10 GMT
சென்னை எழும்பூர்-தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து 25-ந்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர்-தூத்துக்குடி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06029), மறுநாள் பகல் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Similar News