செய்திகள்
கருணாநிதி வீட்டில் பலத்த பாதுகாப்பு
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் கருணாநிதி வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கோபால புரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் வீடு ஆகியவற்றின் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.