செய்திகள்

கருணாநிதி வீட்டில் பலத்த பாதுகாப்பு

Published On 2017-02-14 05:57 GMT   |   Update On 2017-02-14 05:57 GMT
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் கருணாநிதி வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வீட்டு முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கோபால புரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் வீடு ஆகியவற்றின் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News