செய்திகள்

சட்டம் - ஒழுங்கு நிலவரம்: தமிழக ஆளுநருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published On 2017-01-23 16:20 GMT   |   Update On 2017-01-23 16:20 GMT
தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவை திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சென்னை:

தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவை இன்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஸ்டாலின் தலைமையில் 8 எம்.எல்.ஏக்களும் இணைந்து ஆளுநரை சந்தித்தனர்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முக ஸ்டாலின், 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினேன். மேலும், சென்னையில் இன்று காலை முதல் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை தேவை என ஆளுநரிடம் கேட்டுக்கொண்டேன். 

பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரினோம்” என்றார்.

Similar News