செய்திகள்

கும்பகோணத்தில் ரெயில் மறியல்: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300 பேர் கைது

Published On 2017-01-20 09:18 GMT   |   Update On 2017-01-20 09:18 GMT
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கும்பகோணத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுவாமிமலை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தி.மு.க.சார்பில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம் தலைமையில் இன்று காலை 8.05 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற ரெயிலை மறித்தனர்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி. செழியன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், கணேசன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூரில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்தனர். இதில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகையில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சீர்காழியில் வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

Similar News