செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குப்படுத்த அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

Published On 2017-01-20 08:06 GMT   |   Update On 2017-01-20 08:06 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன்கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் வழக்குகளை விசாரிக்க தொடங்கிய போது, அவர்கள் முன்பு வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி ஒரு கோரிக்கை முன்வைத்தார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்தை ஒழுங்குப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இது தொடர்பாக தமிழக அரசும், போலீசாரும் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். இந்த ஐகோர்ட்டு உத்தரவிட தேவையில்லை’ என்று கூறினார்கள்.

Similar News