செய்திகள்
திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
திருச்சி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). திருச்சியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களுக்கு ஷர்மிளா (7), ஷார்வதா(6), என்ற 2 மகளும் , சபரிதாசன்(2½) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று மாலை 5 பேரும் வீட்டிற்குள் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 பேரும் எதற்காக விஷம் குடித்தனர் என்று தெரியவில்லை.குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவியும் சேர்ந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனரா? அல்லது ஏழ்மை காரணமாக விஷம் குடித்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). திருச்சியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (35). இவர்களுக்கு ஷர்மிளா (7), ஷார்வதா(6), என்ற 2 மகளும் , சபரிதாசன்(2½) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று மாலை 5 பேரும் வீட்டிற்குள் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5 பேரும் எதற்காக விஷம் குடித்தனர் என்று தெரியவில்லை.குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவியும் சேர்ந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனரா? அல்லது ஏழ்மை காரணமாக விஷம் குடித்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.