செய்திகள்

செம்பட்டி அருகே அய்யப்ப பக்தர்கள் கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2016-12-09 05:07 GMT   |   Update On 2016-12-09 05:07 GMT
திண்டுக்கல் அருகே இன்று அதிகாலை அய்யப்ப பக்தர்கள் வந்த கார் மீது லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திண்டுக்கல்:

ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரெய்காட்பள்ளியை சேர்ந்த 5 பேர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர். சபரிமலை செல்வதற்காக ஊரிலிருந்து காரில் புறப்பட்டனர். இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, போடிகாமன்வாடி பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக கார் மீது மோதியது.

இதில் காரை ஓட்டிவந்த டிரைவர் மோகன்(வயது30), நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். வினய்(29), நாராயணசாமி(29), அமர்நாத்ரெட்டி(25) ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News