செய்திகள்
தொடர்ந்து கடல் கொந்தளிப்பு: பாம்பனில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
கடல் கொந்தளிப்பால் பாம்பனில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வார்தா புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக உருவெடுத்து உள்ளது. இதற்கு வார்தா என பெயரிடப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
நேற்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. பாம்பன் ரெயில் பால உயரத்துக்கு அலைகள் எழும்பியது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
வார்தா புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக உருவெடுத்து உள்ளது. இதற்கு வார்தா என பெயரிடப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
நேற்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. பாம்பன் ரெயில் பால உயரத்துக்கு அலைகள் எழும்பியது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
வார்தா புயல் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.