செய்திகள்

மகளிர் மன்ற பெண்கள் சேமிப்பு கணக்கில் குளறுபடி: திருவாடானை வங்கியில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2016-12-04 04:48 GMT   |   Update On 2016-12-04 04:48 GMT
திருவாடானை ஸ்டேட் வங்கியில் மகளிர் மன்ற பெண்கள் சேமிப்பு கணக்கில் லட்ச கணக்கான ரூபாய் வரவானதை தொடர்ந்து மதுரையில் இருந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்டேட் வங்கியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். மகளிர் மன்றத்தைச் சேர்ந்த பெண்கள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வோர் என ஏராளமானோர் கணக்கு துவங்கி வரவு-செலவு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பண்ண வயல் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மன்றத்தினர் 4 பேரின் கணக்கில் அவர்களுக்கு தெரியாமல் ரூ. 3 லட்சம் வரை கணக்கில் வரவு செய்யப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மகளிர் மன்றத்தினர் வங்கி மேலாளரை சந்தித்து தகவல் தெரிவித்தனர். தவறு நடந்து விட்டதாக வங்கி மேலாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏராளமான பெண்கள் உள்பட வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கை சரிபார்ப்பதற்காக நேற்று வங்கியில் குவிந்தனர். வாடிக்கையாளர்களின் கணக்கை மதுரையிலிருந்து வந்த வங்கி உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Similar News