செய்திகள்
செங்கோட்டை அருகே கள்ளக்காதலியை கொன்ற தொழிலாளி போலீஸ் நிலையத்தில் சரண்
செங்கோட்டை அருகே கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தொழிலாளி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்தாய்(வயது 35). இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். வெள்ளத்தாய்க்கும், சிவகிரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகன்(55) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
முருகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் சிவகிரியில் உள்ள நிலையில் அவர்கள் இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 10 வயதில் பாலமுருகன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முருகனுக்கு அதிக அளவு கடன் இருந்துள்ளது. அந்த கடனை அடைக்க வெள்ளத்தாயின் வீட்டு பத்திரத்தை முருகன் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு வெள்ளத்தாய் மறுத்து வந்துள்ளார். மேலும் வெள்ளத்தாயின் நடத்தையிலும் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் நேற்று முன்தினம் காலை வெள்ளத்தாயை வீட்டில் இருந்த மின் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முருகன் இன்று காலை சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் இன்று செங்கோட்டை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்தாய்(வயது 35). இவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். வெள்ளத்தாய்க்கும், சிவகிரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகன்(55) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
முருகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் சிவகிரியில் உள்ள நிலையில் அவர்கள் இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 10 வயதில் பாலமுருகன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முருகனுக்கு அதிக அளவு கடன் இருந்துள்ளது. அந்த கடனை அடைக்க வெள்ளத்தாயின் வீட்டு பத்திரத்தை முருகன் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு வெள்ளத்தாய் மறுத்து வந்துள்ளார். மேலும் வெள்ளத்தாயின் நடத்தையிலும் முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டநிலையில் நேற்று முன்தினம் காலை வெள்ளத்தாயை வீட்டில் இருந்த மின் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முருகன் இன்று காலை சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் இன்று செங்கோட்டை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.