செய்திகள்

பாளை மத்திய சிறையில் பிளேடால் வயிற்றை கிழித்து கைதி தற்கொலை முயற்சி

Published On 2016-12-02 10:07 GMT   |   Update On 2016-12-02 10:07 GMT
பாளை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). ஒரு பெண்ணை கொன்று நகை கொளையடித்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து மணிகண்டன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மதியம் சிறையில் இருந்த மணிகண்டன் பிளேடால் தனது வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அருகில் இருந்த கைதிகள் அவரை தடுத்து சிறை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பலத்த பாதுகாப்பு மிக்க மத்திய சிறைச்சாலைக்குள் ஆயுள்தண்டனை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News