விக்கிரவாண்டி அருகே தண்டவாளத்தில் விரிசல்
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி- பேரணி ரெயில் நிலையம் இடையே இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் அதிர்வு ஏற்பட்டதை டிரைவர் உணர்ந்தார்.
எனவே ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டது. ரெயில் பேரணி நிலையத்துக்கு வந்ததும் அங்கிருந்த அதிகாரியிடம் விக்கிரவாண்டி- பேரணி இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் பேரணி பகுதிக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
இதனால் பெரும் விபத்தில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது. மேலும் அந்த வழியாக வந்து கொண்டிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
பின்னர் ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர். தற்காலிகமாக தண்டவாளத்தை சீரமைத்தனர். 1 மணிநேரம் தாமதமாக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றது.
மணி நேரம் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ் பிரஸ் ரெயில்கள் புறப்பட்டுச் சென்றன. 30 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.