செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் காரில் ரூ.50 ஆயிரம் கொள்ளை

Published On 2016-10-25 06:26 GMT   |   Update On 2016-10-25 06:26 GMT
கும்மிடிப்பூண்டியில் முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் காரில் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்.

இவர் தனது காரில் கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள கடைக்கு சென்றார். கடை முன்பு காரை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது காரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார்.

புருஷோத்தமன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய போது காரின் கதவை திறந்து மர்ம நபர் பணத்தை கொள்ளையடித்து உள்ளது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Similar News