செய்திகள்

கேணிக்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியது: 2 வாலிபர்கள் பலி

Published On 2016-10-25 06:10 GMT   |   Update On 2016-10-25 06:11 GMT
கேணிக்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியதில் 2 வாலிபர்கள் இறந்தனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சுத்திவலசையை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் நவீன் (வயது18). வட்டான்வலசையை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தினேஷ் (18).

நேற்று இரவு நவீனும், தினேசும் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் சென்றனர். அம்மன் கோவில் அருகே அவர்கள் சென்றபோது, அந்த வழியே தூத்துக்குடியில் இருந்து ராமேசுவரத்திற்கு மீன் வலைகள் ஏற்றிய டிராக்டர் ஜீப் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த நவீன், தினேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.

விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News